தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.[1] 2000களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், 2013 ஆவது ஆண்டில் கீதாஞ்சலி மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். இவர் தமிழில் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் தாவணியில் முதல்முதலாக நடித்து ரசிகர்களை மயக்க வைத்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன் படத்தை கீர்த்தி சுரேஷிற்காகவே சிலர் பார்த்தார்கள் என்றே கூறலாம். அதன்பிறகு முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்த கீர்த்தி தேசிய விருதும் பெற்றிருக்கிறார்.
நடிகைகள் அவ்வளவு சீக்கிரம் திருமண பந்தத்தில் இணைவது இல்லை. காரணம் திருமணம் ஆனால் சினிமாவில் சாதிக்க முடியாதோ என்ற ப ய ம் சிலரிடம் உள்ளது.
ஆனால் சமந்தா போன்ற நாயகிகள் திருமணம் முடிந்தும் நடித்து கலக்கி வருகிறார்கள். அண்மையில் நடிகை கீர்த்தி சுரேஷ் ஒரு பேட்டியில், முன்பு திருமணம் குறித்த பார்வை வேறொரு மாதிரி இருந்தது, இப்போது மாறிவிட்டது.
கல்யாணம் செய்துகொண்டும் நடிகைகள் நடித்து சாதித்து வருகிறார்கள், இப்படி பேசுவதால் நான் இப்போது திருமணம் செய்துகொள்ள போகிறேன் என்பது இல்லை.ஆனால் கல்யாணம் குறித்த பார்வை இப்போது எனக்கு மாறியுள்ளது என கூறியுள்ளார்.